Friday 21 December 2012

முதல் மரியாதை

நான் வெள்ளக்குட்டையிலே பிறந்தேன்.
அது ஒரு மலையோர கிராமம். வாணியம்பாடி என்ற தோல் தொழில் நகரத்திற்கு(புகழ்பெற்ற இஸ்லாமியா கல்லூரியும் அந்த நகரில் தான் உள்ளது) பதினோரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பெரிய கிராமத்தை மூன்று வயதில் பிரிந்து 27வது வயதில் 1967ம் ஆண்டு மீண்டும் மணமானவனாக ஒருவகையில் வெள்ளக்குட்டையின் மாப்பிள்ளையாக மீண்டும் அந்த கிராமத்திற்குத் திரும்பினேன் .இந்த 24ஆண்டு இடைவெளியில் என்னென்னமோ நடந்து விட்டது . அதைப்பற்றி விளக்க எவ்வளவோ இருக்கின்றது .வாழ்க்கையின் முதல் அத்தியாயம் ஆரம்பித்த இடம் என்றென்றும் முதல் மரியாதைக்கு உரியது.  அந்த மரியாதையை அல்லது வணக்கத்தை அறிவித்துவிட்டுப்பதிவுகளைத் தொடங்குகிறேன்.

No comments:

Post a Comment