Monday 28 January 2013

மனித உரிமைப் பிரகடனம்


மனித உரிமைப் பிரகடனம்
மனிதனுக்கு அடிப்படியில் உள்ள உரிமைகளை வரையறுத்து விளக்கமாக ஐ.நா.சபை இந்தப் பிரகடனத்தை வெளியிட்டது. அவற்றின் விதிகள் வருமாறு.
விதி : 1
எல்லா மனித ஜீவன்களும் பிறப்பால் சுதந்திரமானவர்களே. கௌரவத்திலும் உரிமைகளிலும் சமமானவர்களே. பகுத்தறிவு, மனச்சாட்சி ஆகிய இரண்டும் வாய்ந்த அவர்கள், ஒருவரோடு ஒருவர் சகோதர உணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்.
விதி : 2
இந்தப் பிரகடனத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட எல்லா உரிமைகளையும், சுதந்திரங்களையும் ஒவ்வொருவரும் பெறத் தகுதியானவர்களே.
அதில் இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் பேன்ற பிற கருத்துக்கள், தேசிய மற்றும் சமூகத் தோற்ற மூலங்கள், சொத்துரிமை, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து ஆகிய இவற்றின் காரணமாக எழும் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது.
ஒரு நாடு அல்லது ஒரு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அதன் அரசியல், பிராந்திய மற்றும் சர்வதேச மதிப்பை வைத்து எந்தப் பாகுபாடும் வழங்கப்பட மாட்டாது.
அந்த நாடு சுதந்திரம் பெற்றதா, கூட்டாட்சி உள்ளதா, சுயாட்சி இல்லாததா அல்லது இதுபோன்ற ஆட்சியுரிமை பற்றிய பிற எந்த வரம்புகளும் இந்த மதிப்பீட்டில் அடங்காது.
விதி : 3
ஒவ்வோரு தனி நபருக்கும் உயிர் வாழ்வு, சுதந்திரம் பாதுகாப்பிற்கான உரிமை உண்டு.
விதி : 4
எவரையும் அடிமைகளாகவோ, கொத்தடிமைகளாகவோ நடத்தக்கூடாது. அடிமை முறையும், அடிமை வியாபாரமும் அவற்றின் எல்லா வடிவங்களிலும் தடைசெய்யப்பட வேண்டும்.
விதி : 5
எவரையும் சித்திரவதைக்கு ஆளாக்கக்கூடாது. குரூரமான, மனிதத் தன்மையற்ற மற்றும் இழிவான முறைகளில் ஒருவரை நடத்தவோ, தண்டிக்கவோ கூடாது.
விதி : 6
எல்லா இடங்களிலும் சட்டத்தின் முன்னால் ஒரு தனி மனிதர் என்ற மதிப்பைப் பெற  ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
விதி : 7
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். சட்டத்தின் சமமான பாதுகாப்பை எவ்வித வேறுபாடும் இன்றிப் பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு.
இந்தப் பிரகடனத்தை மீறும் எந்த ஒரு பாகுபாட்டிற்கோ அல்லது அத்தகைய பாகுபாட்டைத் தோற்றுவிக்கும் எந்த ஒரு தூண்டுதலுக்கோ எதிராகச் சமமான பாதுகாப்பைப் பெறவும் எல்லோருக்கும் உரிமை உண்டு.
விதி : 8
அரசியலமைப்பின் மூலமோ, சட்டத்தின் மூலமோ வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் எந்தச் செயலுக்கும் எதிராக, உரிய தேசிய நீதிமன்றங்களில் நியாயம் பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
விதி : 9
விசாரணையின்றி எந்த நபரையும் கைதுசெய்வதோ, சிறையில் வைப்பதோ, நாடு கடத்துவதோ கூடாது.
விதி : 10
ஒருவரது உரிமைகள் பற்றித் தீர்மானிக்கவும், அவரது கடமைகள் பற்றித் தீர்மானிக்கவும் அல்லது தமக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டிற்காகவும் அவர் ஒரு சுதந்திர நீதிமன்றத்தின்முன் நியாயமான பொது விசாரணைக்கு முறையிடலாம். அவர் அதற்கு முழுமையான சமத்துவ உரிமை உடையவராவார்.
விதி : 11
1) ஒரு சட்டபூர்வமான குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும், தனக்கு  தேவையான பாதுகாப்பை அளிக்கிற முழுஉறுதி தருகின்ற பொது விசாரணை, சட்டபூர்வமாக நடந்து முடியும் வரை, தாம் நிரபராதிதான் என்று கூறிக் கொள்ள உரிமை உண்டு.
2) ஒரு செயலைச் செய்வதற்காகவோ அல்லது செய்ய மறுத்ததற்காகவோ அந்தக் காலத்திய தேசிய அல்லது சர்வதேச சட்டத்தின்கீழ் வராத ஒன்றில் ஈடுபட்டதாக எவர் ஒருவரையும் குற்றவாளி ஆக்கக் கூடாது.
விதி : 12
ஒருவரது அந்தரங்கம், குடும்பம், கடிதப் போக்குவரத்து, இவற்றின்மீது எவரும் தன்னிச்சையாகத் தலையிடக்கூடாது. அவரது கௌரவம் மற்றும் மதிப்பின் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது.
அத்தகைய தலையீடு மற்றும் தாக்குதல்கள் ஏற்பட்டால், சட்டபூர்வமான பாதுகாப்பைப் பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
விதி : 13
1) ஒவ்வொருவருக்கும் தமது நாட்டின் எல்லைகளுக்குள் பயணம் செய்யும் சுதந்திரமும் வசிக்கும் உரிமையும் உண்டு.
2) ஒவ்வொருவருக்கும் தம் நாடு உள்பட எந்த நாட்டையும் விட்டு வெளியேறவும் தன் நாட்டிற்குத் திரும்பி வரவும் உரிமை உண்டு.
விதி : 14
1) தமக்கு நேரிடம் கொடுமைளில் இருந்து மீளப் புகலிடம் தேடி வேறு நாடுகளுக்குச் செல்லவும், அங்கு தங்கியிருக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
2) அரசியல் சார்பற்ற குற்றங்களில் ஈடுபடுவோரோ, ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் விரோதமான செயலில் ஈடுபடுவோரோ இந்த உரிமையைக் கோர முடியாது.
விதி : 15
1) ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெற ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
2) ஒருவரது குடியுரிமையை எவரும் தன்னிச்சையாகப் பறிக்கக்கூடாது. தமது குடியுரிமையை வேறொரு நாட்டிற்கு அவர் மாற்ற விரும்பினால் அந்தச் சுதந்திரத்தை மறுப்பதும் கூடாது.
விதி : 16
1) மதம், ஒரு நாட்டின் குடியுரிமை, இனம் போன்ற எந்த வரையறையுமின்றி வயது வந்த ஆண்களும், பெண்களும் திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தை அமைக்கும் உரிமை உள்ளவர்கள்.
2) திருமணம் முடிவு செய்யும்போதும், திருமணத்தின் போதும், மணமுறிவின் போதும் அவர்களுக்குச் சம உரிமை உண்டு.
3) விரும்புகின்ற ஜோடியினரின் சுதந்திரமான முழு சம்மதத்தின் பேரில் மட்டும்தான் திருமணம் நடக்கலாம்.
4) குடும்பம்தான் சமுதாயத்தின் இயற்கையான அடிப்படைக் குழு அலகு. எனவே, சமுதாயம் மற்றும் அரசாங்கம் இரண்டிலிருந்தும் பாதுகாப்பு பெறும் உரிமை அதற்கு உண்டு.
விதி : 17
1) ஒவ்வொருவருக்கும் தனியாகவோ, பிறருடன் சேர்ந்தோ சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை உண்டு.
2) தன்னிச்சையாக ஒருவரது சொத்துக்களை எவரும் பறிக்கக் கூடாது.
விதி : 18
ஒவ்வொருவருக்கும் சிந்தனைச் சுதந்திரத்தோடு மனச்சாட்சி, மற்று மதச் சுதந்திரமும் உண்டு.
இந்த உரிமையில் ஒருவர் தம் மதத்தையோ, நம்பிக்கையையோ மாற்றிக்கொள்ளும் அம்சமும் அடங்கும்.
ஒருவருக்குத் தனியாகவும், பிறரோடு ஒன்றுசேர்ந்தும் பகீரங்கமாகவோ, அந்தரங்கமாகவோ தன் மதத்தைப் பரப்பவும், ஒரு போதனைகயில் நம்பிக்கை காட்டவும், ஒன்றை அனுசரிக்கவும், தொழவும் கடைப்பிடிக்கவும் சுதந்திரம் உண்டு.
விதி : 19
ஒரு கருத்தை மேற்கொள்ளவும், அதை வெளியிடவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. எந்தக் குறுக்கீடும் இன்றி தன் கருத்தை ஒருவர் கடைப்பிடிக்கலாம். பிரதேச எல்லைப் பாகுபாடின்றிச் செய்திகளையும் எண்ணங்களையும் அவர் தேடிச் செல்லவும், பெறவும், வெளியிடவும் உரிமை உண்டு.
விதி : 20
1) சமாதான முறையில் ஒன்று கூடவும், சங்கம் அமைக்கவும் ஒவ்வொருவருக்கும் சுதந்திரமான உரிமை உண்டு.
2) ஒரு சங்கத்திலோ, கூட்டத்திலோ சேரவேண்டும் என்று எவரும் எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
விதி : 21
1) ஒவ்வொருவருக்கும் தானே நேரடியாகவும் அல்லது சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவும், தன் நாடடின் அரசாங்கத்தில் பங்கேற்கும் உரிமை உண்டு.
2) தன் நாட்டின் பொதுச் சேவையில் பங்கேற்கவும் ஒருவருக்கும் உரிமை உண்டு.
3) மக்களின் தீர்மானம்தான் அரசாங்கத்தின் அடிப்டை அதிகாரமாகும். இந்தத் தீர்மானம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் உண்மையான தேர்தலின் அடிப்படையில் வெளியிடப்பட வேண்டும்.
நடக்கும் தேர்தலில் பொதுவாகவும், சமமான வாக்குரிமைக்கு வாக்குறுதி அளிப்பதாகவும், ரகசிய வாக்களிப்பு முறையிலோ அல்லது அதற்கு இணையான, சுதந்திரமான வாக்களிப்பு முறைகளை அனுசரித்தோ நடைபெற வேண்டும்.
விதி : 22
ஒவ்வொருவருக்கும் சமுதாயத்தில் ஓர் உறுப்பினர் என்ற வகையில் சமூகப் பாதுகாப்புக்கு உரிமை உண்டு.
ஒவ்வொருவருக்கும் நமது கௌரவத்திறகும், தம் ஆளுமையின் சுதந்திரமான வளர்ச்சிக்கும் தேவையான பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் உண்டு.
அவை அந்தந்த நாட்டின் அமைப்பு மற்றும் வளங்களுக்கு ஏற்புடையதாகவும், தேசிய முயற்சி மற்றும் சர்வதேசக் கூட்டுறவின் மூலம் பெறத்தக்கதாகவும் அமையும்.
விதி : 23
1) ஒவ்வொருவருக்கும் வேலைசெய்யும் உரிமை உண்டு. அவ்வாறே வேலையைத் தேர்ந்து எடுக்கும் சுதந்திரமும் உண்டு. நியாயமானதும், ஏற்கத்தக்கதுமான சூழல்களில் வேலைசெய்யும், வேலையின்மைக்கு எதிரான பாதுகாப்பைப் பெறவும் சுதந்திரம் உண்டு.
2) எந்த வேறுபாடும் இன்றி, செய்யும் சமமான வேலைக்கேற்ற, சமமான சம்பளம் பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
3) வேலைசெய்யும் ஒவ்வொருவருக்கும், நியாயமான ஏற்கத்தக்க ஊதியம் பெறும் உரிமையுண்டு. எந்த ஊதியம் அவரையும் அவரது குடும்பத்தையும் காப்பதுடன், அவரது மனித கௌவரத்திற்கு மதிப்பளிப்பதாகவும் தேவைப்பட்டால் சமூகப் பாதுகாப்பினால் அது உறுதிசெய்யக் கூடியதாகவும் அமையவேண்டும்.
4) தனது நலன்களுக்காகத் தொழிற் சங்கங்களை அமைக்கவும், அதில் சேரவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
விதி : 24
ஒவ்வொருவருக்கும் ஓய்வெடுக்கவும் விடுமுறை பெறவும் உரிமை உண்டு. இதில் நியாயமான அளவிலான வேலை நேரம், சம்பளத்துடன் கூடிய காலாந்தர விடுமுறை இவை அடங்கும்.[தொடரும்]

No comments:

Post a Comment