Saturday 26 January 2013

நீதியின் வகைகள்


நீதியின் வகைகளும் அவற்றின் வழிகாட்டிக் கொள்கைகளும்
நீதியின் வகைகள்                                                  வழிகாட்டிக் கொள்கைகள்

பொதுப்படை நீதி 
                                            பொதுவான மனித உறவுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் 
                                                                                       சேரவேண்டியதைக் கொடு
பொது நீதி                                            சமுதாயத்தோடு தனிநபருக்கு உள்ள உறவு
                                                                                           பொது      நன்மையை வளர்த்தல்
பங்கீட்டு நீதி                                   தனிநபர்களுக்குச்சமுதாயத்தோடு உள்ள 
                                                                                            உறவு தனிநபரின் நலம்  ஒருவரோடு ஒருவருக்கான நீதி    சமமான தனிநபர்கள் அல்லது 
                                                                          நிறுவனங்களுக்கிடையே உள்ள   
                                                                                உறவு  மதிப்பீட்டில் சமத்துவம்   

சட்ட நீதி
குற்றம் இழைக்கும் தனி நபருக்கும் பொது நன்மையைப் பாதுகாத்தல்,
சமுதாயத்திற்கும் இடையிலுள்ள உறவு குற்றம் இழைத்தவரத் திருத்துதல்
சமூக நீதி
தனிநபர்கள்,  சமுதாயங்கள், நாடுகள் மற்றும்
ஏழைகளுக்கு இடையில்உள்ள உறவு ஒரு நியாயமான சமுதாய அமைப்பு
3. ஒவ்வொருக் கொருவரான நீதி
இந்த நீதி சமமான தனிநபர்களுக்கு இடையிலோ, குழுக்களுக்கு இடையிலோ உள்ள நீதியாகும். வழிவழியாக மக்கள் பெரும்பாலும் இந்த வகை நீதியைத்தான் நீதி என்று கருதுகிறார்கள்.
ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளும் சூழ்நிலைகளில் இது அமலாகிறது. தனிநபர்கள், குழுக்கள், நிறுவனங்கள் இவர்களிடையே உற்பத்திப் பொருள்கள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கைமாறும். அவ்வாறே சேவைகளும் கைமாறும்.
அப்போது இருவரிடையே உள்ள திறமை. பொருள்களின் மதிப்பு இவற்றிற்கு ஏற்றபடி இந்த வகை நீதி நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த உறவு தனிநபர்கள் சார்ந்தது. எனவே ஒருவர் மற்றவர் உரிமைகளை மதிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
எனவே, ஒரு சக மனிதரின் உரிமைகளை வஞ்சிப்பதோ, அதில் குறுக்கிடுவதோ ஒழுங்கீனமாகும். பொருள்களையோ, சேவைகளையோ ஒருவர் மற்றொருவருக்கு வழங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது ஒருவர் தாமாகவே தம் உரிமையை வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுத்தபோது, தவிர மற்ற சமயங்களில் முழுமையான முறையில் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.
உதாரணமாக ஒரு முதலாளி தன் ஊழியருக்கு நியாயமான சம்பளத்தைக் கொடுக்கத் தவறும்போதோ அல்லது  ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் போதோ இந்த நீதி மீறப்படுகிறது.
.4. சட்ட நீதி
மேற்சொன்ன நீதிகள் உரிமைகளைப் பற்றிப் பேசுகின்றன. சட்ட நீதியோ பொறுப்புகளைப் பேசுகிறது.
தனிநபர்கள் என்ற முறையில் நமக்கு வெறும் உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் உண்டு. நம்மில் ஒவ்வொருவரும் நமது செய்கைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அதனால் நேரும் விளைவுகளுக்குச் சம்மதிக்க வேண்டும்.
சமுதாயத்தின் நலனுக்கோ, அதில் வாழும் உறுப்பினர் நலனுக்கோ ஒருவர் தீங்கு விளைவிக்கும்போது என்ன நடக்கிறது? சமுதாயம் அந்த நபரை எப்படி நடத்துகிறது?  நடந்த தீங்கிற்கு எந்த வழிகளில் ஈடு  செய்வது?
இந்தக் கேள்விகளுக்குச் சட்ட நீதி பதிலளிக்க முனைகிறது. நீதிக்கு ஒருவர் தீங்கு விளைவித்தால் சட்ட அதிகாரம் நிர்ணயிக்கிற, உரிய நியாயமான தண்டணையை அவர் ஏற்கவேண்டும். இதுவேநீதியின் குறிக்கோள்.
தண்டனையின் நோக்கம் பொதுநல வளச்சிதான், குற்றம் புரிந்தவர் திருந்துவதுதான்.
ஆனால், மனித ஆளுமையின் அடிப்படையைத் தகர்க்கும் தண்டனைகள் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில், எவர்மீது தண்டனை விதிக்கப்படுகிறதோ அவரை மட்டுமன்றி, தண்டனை விதிப்பவரையும் அது சிறுமைப்படுத்துகிறது.

5.
சமுதாய ரீதியில் நியாயமாக இல்லாத, இருக்க விரும்பாத ஒரு சமுதாயம் தன் எதிர்காலத்தைத் தானே அபாயத்துக்கு உள்ளாக்கிக் கொள்ளும்.    - போப் ஜான்பால்- 2

இதுவரை நாம் கண்ட நான்கு வகை நீதிகளும் உறுதியான சமுதாயப் பின்னணியில் சமூக உறவுகளை நிலைநிறுத்தப் பயன்படுகின்றன.
ஒரு விஷயத்தை நாம் மிக நன்றாய் அறிவோம். அதாவது கடந்த 200 ஆண்டுகளில் சமுதாயம் தீவிரமான மாற்றத்திற்கு ஆளாகியுள்ளது.
நவீன உலகத்தின் பிறப்பு ஏராளமான அதிசயங்களைத் தோற்றுவித்திருக்கிறது. அதே சமயம் அவற்றோடு கூடவே எண்ணிக்கையற்ற பிரச்சனைகளையும் உருவாக்கி விட்டிருக்கிறது.
நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள், பணக்காரர்களால் ஏழைகள் சுரண்டப்படுவது, வலிமையானவர்கள் வலிமையற்றவர்களைச் சுரண்டுவது,
உலகின் சில பகுதிகளின் அபரிமிதமான வளம் குவிந்திருப்பது, மற்ற பகுதிகளில் நம்பவே முடியாத வறுமை,
சாதி, நிறம், இனம், மதம், வகுப்பு முதலிய அம்சங்களை வைத்து ஏற்பட்ட பிரிவினைகள். இவை எல்லாம் கண்கூடான நிஜங்களாக உள்ளன.
வழிவழியாகப் பயன்படும் வார்த்தைகளுக்குக் கூட நம்மிடையே தென்படும் பிரம்மாண்டமான அநீதிகளை விவரிக்கிற சக்தி இல்லை.
எனவேதான், `சமூக நீதி' என்ற வார்த்தை பிறந்துள்ளது. இது உறுதியற்ற சொல்தான், மாறக்கூடியதுதான். அதன் பொருள் இடத்திற்கு ஏற்ப வேறுபடுவதுதான்.
எனினும், ஒரு சிறப்பான விதத்தில் அது ஏழைகள், சுரண்டப்படுவோர், நசுக்கப்படும் மக்கள் மற்றும் நாடுகளுக்கு உரிய நீதியையே குறிக்கிறது.
ஏழைகள் மற்றும் கேட்க நாதியற்றோரின் பிரச்சனைகள் பரிதாபகரமானவை, அவசரமானவை. எனவேதான் இன்று நீதி என்பதே சமூக நீதிக்கு மாற்றுச் சொல்லாக விளங்குகிறது.





No comments:

Post a Comment